Skip to content

வாரச்சந்தையில் மது பாட்டில்கள் விற்ற மாற்றுத்திறனாளி கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டில் வாரச்சந்தை பகுதியில் மாற்று திறனாளி மோட்டார் சைக்கிளில் வந்து அரசு மது பாட்டில்களை சில்லறையில் விற்பதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் நிலைய தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த ரகசிய புகாரின் பேரில் வாரச்சந்தை பகுதியில் சாதாரண உடையில் சோதனை செய்த போலீசார். அங்கு ஊனமுற்றோருக்கான 3 சக்கர மோட்டார் சைக்கிளில் வைத்து அரசு மது பாட்டில்களை சில்லரை விற்பனை செய்த கல்லாங்குலத்தை சேர்ந்த
ராமையன் மகன் மணிவண்ணன் (48) என்பவர் மது பாட்டில்களை விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மாற்றுத்திறனாளி என்பதால் எச்சரித்து பிணையில் விடுவித்தனர். மேற்படி நபர் மீது ஏற்கனவே ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!