புதுக்கோட்டை, அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 3 டூவீலர்கள் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை. கார் டிரைவர் வெங்கடேசன் மதுபோதையில் ஓட்டினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

