இரண்டு கால்களும் செயலிழந்து முடியாத நேரத்திலும் ஜனநாயக கடமை ஆற்ற வாக்குச்சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளி முதியவர். இன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட கா. அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கந்தசாமி 84 வயது மதிக்கத்தக்க முதியவர் தனது இரண்டு கால்களும் செயல் இழந்த நிலையில் நண்பர்கள் உதவியுடன் ஸ்ட்ரக்சர் மூலம் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தனது மனைவியுடன் ஜனநாயக கடமையை ஆற்றினார். இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் தனது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வாக்கு சாவடி மையத்திற்கு வந்த முதியவர் செயல் மற்ற வாக்காளர் மத்தியில் வியப்பையும், ஆச்சரியத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
