Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தன் குட்டிக்கு பலா மரத்தில் ஏறி பலாப்பறிக்கும் தாய் யானை

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சோலையார் டேம் காடம்பாறை டேம் வெள்ளி முடி மளுக்கு பாறை நவமலை பன்னி மேடு முடிஸ் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காட்டு அணை கூட்டங்கள் அதிக அளவில் உள்ளது இதில் புதுக்காடு பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டமும் இருக்கிறது யானைகள் அதிக அளவில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நடமாட்டம் உள்ளதால் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் போரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் எஸ்டேட் தொழிலாளர்கள் பகுதிக்கு வராமல்

இருக்க இரவு பகலாக சுழற்சி முறையில் பணியாற்றிய யானைகள் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்றனர் இந்நிலையில் முடிஸ் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானை தனது குட்டிக்காக பலா மரத்தில் ஏறி பலா பறிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது வனத்துறையினர் கூறுகையில் முடிஸ் பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் தற்போது தாய் தனது குட்டிக்காக பலா மரத்தில் ஏறி பறித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது எனவும் வனவிலங்குகள் பகல் நேரத்தில் நடமாட்டம் உள்ளதால் எஸ்டேட் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்துள்ளோம் என தெரிவித்தனர் .

error: Content is protected !!