Skip to content

சொகுசு வாழ்க்கைக்காக மிரட்டி பணம் பறிக்க திட்டம்.. ரகசிய கேமரா வைத்த காதலன் வாக்குமூலம்

  • by Authour

ஓசூர் அருகே பெண்கள் விடுதியில் ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க திட்டமிட்டு, விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தினோம், கைதான இளம் பெண்ணின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட் டம், உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடியல் ரெசிடென்சி” விடுதியில், 4வது பிளாக், 8வது மாடியிலுள்ள ஒரு குளியலறையில், பெண் தொழிலாளர்கள் குளிப்பதை படம் பிடிக்க ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது. கேமரா வைத்ததாக, அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒடிஷாவை சேர்ந்த நீலுகுமாரி குப்தா (23), அவரது காதலன் ரவி பிரதாப் சிங், (29), ஆகியோரை, உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர். ரவி பிரதாப் சிங்கிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். போலீசார் தெரிவிக்கையில் நீலுகுமாரி குப்தா, ரவிபிரதாப் சிங் நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன், ஒடிஷாவைச் சேர்ந்த சந்தோஷ், நீலுகுமாரி குப்தாவை காதலிப்பதாக கூறியுள்ளார். இருவரிடமும் நீலுகுமாரி குப்தா பழகி வந்தார்.

இந்நிலையில், நீலுகுமாரி குப்தாவிடம், சொந்தமாக கார் வாங்க வேண்டும். அதில் உன்னை ராணி போல அழைத்துச் செல்ல வேண்டும் என, ஆசையை தூண்டுவது போல ரவி பிரதாப் சிங் பேசியுள்ளார். அதற்கு பணம் சம்பாதிக்க இருவரும் திட்டம் தீட்டினர். ‘தான் தங்கியுள்ள விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்து, அதில் பதிவாகும் ஆபாச வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி, மிரட்டி பணம் பறிக்கலாம்’ என, நீலு குமாரி குப்தா யோசனை தெரிவித்துள்ளார். அக்., 19ம் தேதி இருவரும் பெங்களூருவில் சந்தித்து கேமரா வாங்கியுள்ளனர். இந்த கேமராவை குளியல றையில் நீலுகுமாரி குப்தா பொருத்தி உள்ளார். கடந்த 2ம் தேதி, வட மாநில பெண் தொழிலாளி ஒருவர், குளியலறையில் ரகசிய கேமரா இருப்பதை பார்த்து நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா: வெளிச்சத்துக்கு வந்த வடமாநில பெண்ணின் திட்டம்

நீலுகுமாரி,  ரவி பிரதாப் எப்படியும் சிக்கி கொள்வோம் என பயந்த சிங்கிற்கு போன் செய்து தகவல் அளித்துள்ளார். அவரும், சந்தோஷ் தான்கேமரா வைக்க சொன்னதாக கூறி, போலீசாரிடம் மாட்டிவிடுமாறு விட்டு, போனை, ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டார். அதன்படி, சந்தோஷை கடந்த மாதம் 19ம் தேதி பெங்களூருவில் சந்தித்ததாக நீலுகுமாரி குப்தா போலீசில் கூறினார். அன்றைய தேதியில் சந்தோஷ் மொபைல் போன் எண் ஒடிஷா மாநிலத்தில் இருந்ததாக, டவர் சிக்னல் வாயி லாக போலீசார் உறுதிபடுத்தினர். நீலுகுமாரி மொபைல் குப்தா போனை ஆய்வு செய்தபோது, கடைசியாக அவர் நவ.. 2ம் தேதி இரவு, 11:45 மணிக்கு, ஒரு எண்ணுக்கு போன் செய்ததும். அது, சுவிட்ச் ஆப்’ ஆகி இருந்ததும் தெரிந்தது. அந்த எண், நீலுகுமாரி குப்தா பெயரில் இருப்பதும், அதை ரவி பிரதாப் சிங் பயன்படுத்தி வந்ததும் உறுதியானது. முன்தினம் கைது செய்த ரவி பிரதாப் சிங் பயன் படுத்தும் மற்றொரு எண்ணை, நீலுகுமாரி குப் தாவிடம் பெற்று, அதன் சிக்னல் மூலமாக டில்லி சென்று,அவரை நேற்று முன்தினம் கைது செய்தோம் என போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!