தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நில அளவு மற்றும் கட்டாய வைப்புநிதியை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாவுக்கு CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா உயர்கல்வியை முழுமையாக தனியார்மயமாக்கி, கல்வியை வியாபாரமாக்கும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தரமற்ற கல்வி நிறுவனங்கள் பெருகும் என்றும், ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
