திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கே தள்ளுவண்டியில் சூப்பு கடை நடத்தி வரும் ரவுடி அக்பர் கான் (43) என்பவர் நடைபாதையில் இடையூறாக அமர்ந்துள்ளார். இதைப் பார்த்து ஸ்ரீதர் அவரை கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அக்பர்கான் மற்றும் அவரது மனைவி பாத்திமா ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீதரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதனால் ஸ்ரீதரர் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ரவுடி அக்பர் கான்மற்றும் அவரது மனைவி பாத்திமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

