திருச்சி, உறையூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 17) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருச்சி மட்டுமல்லாதது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகாலை முதலே வருகை தந்து அம்மனை தரிசித்து சென்றனர்.
