தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் நிறுவனம், மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவின் நெய்க்கான விலை உயர்வை அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.37 வரை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், வணிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த விலை உயர்வு உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக சென்னையில் உள்ள ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு மொத்த வியாபாரிகள் மற்றும் முகவர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
