Skip to content
Home » படப்பிடிப்பில் விபத்து….. நூலிலையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா….

படப்பிடிப்பில் விபத்து….. நூலிலையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா….

  • by Senthil

சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நூலிலையில் நடிகர் சூர்யா உயிர்தப்பினார். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சூர்யாவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ரோப் கேமரா அறுந்து விழுந்த நிலையில் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!