நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ரெட்டை தல” திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண்விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இதானி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், நல்ல திரைப்படங்களை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னமும் அதிகளவில் உள்ளதால் திரையரங்கிற்கு கொண்டு வரக்கூடிய அளவிற்கு நல்ல

படங்களை எடுக்கும் கடமை தங்களுக்கும் உள்ளது என்றார். புதிய திரைப்படங்கள் ஓடிடியில்

எவ்வளவு நாட்களுக்கு பிறகு வெளியாக வேண்டும் என்கிற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.

மேலும் விஜயின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்; அவருக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்த அருண் விஜய், அரசியல் மட்டுமல்லாது அனைத்து

துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கதான் செய்கிறது என்றார்.

