பாதுகாப்பு கணக்காளர் (CDA), சென்னை அலுவலகம் ஏற்பாடு செய்த 206வது SPARSH (System for Pension Administration – Raksha) குறைதீர்க்கும் முகாம் இன்று திருச்சி ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார். ஓய்வூதியதாரர்களின் SPARSH தொடர்பான குறைகளைதீர்த்து வைத்தனர்.இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, முதல் முறையாக இந்திய அளவில் SPARSH திட்டத்தின் கீழ் 5 மொபைல் வேன்களை அமைச்சர் எல். முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனங்கள், நாளை முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றிப் பயணித்து, பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களின் புகார்கள் மற்றும் தேவைகளை அவர்களது வீட்டு வாசலிலேயே தீர்த்து வைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரைவாக தீர்க்கப்பட்ட 14 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:
இந்த விழாவிற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வர வேண்டியது. சில தவிர்க்க முடியாத சூழல் காரணமாக அவர் வர முடியவில்லை.
பென்ஷன் பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமல் Sparsh நிகழ்வு மூலம் தீர்க்கும் நிலையை பிரதமர் உருவாக்கி உள்ளார். ராணுவம் மீது அதிக அக்கறை கொண்டவராக பிரதமர் உள்ளார்.
மக்களுக்கு ட்ரான்ஸ்பிரண்ட் திட்டங்கள் மூலம் நேரடியாக அடையும் திட்டம் பிரதமர் துவக்கி உள்ளார். ஒரே நேரத்தில் 100 கவுன்டர் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது. இங்கு வர இயலாத ராணுவ வீரர்கள் வீட்டிற்கு சென்று பிரச்னைகளை தீர்க்கும் வகையில் 5 வாகனங்கள் இயக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் 2
ராணுவ தளவாடங்களில் ஒன்று திருச்சியில் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனை பிரதமர் செய்துள்ளார்.நம் நாட்டின் பாதுகாப்புக்கு நம் தயாரிக்கும் பாதுகாப்பு பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.
இதேபோன்று இன்னும் நிறைய முகாம்கள் நடைபெற உள்ளது. 2047 ல் அப்துல் கலாம் கண்ட கனவாக வல்லரசு நாடக மாற அந்த பாதையில் பயணிப்போம்.
அதனைத் தொடர்ந்து குறைதீர்க்கும் முகாமில் முப்படையை சேர்ந்த பயனாளிகளுக்கு நீண்ட நாள் தீர்க்கப்படாமல் இருந்த அவர்களுக்கு பென்ஷன் பணத்தினை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் எல் முருகன் அளித்த பேட்டி:
திமுக மிகப்பெரிய தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததில் இருந்து பயத்தில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
கொலை, கொள்ளை, லஞ்சம் லாவண்யம்,போதைப் பொருள் நடமாட்டம் இதனால் மக்கள் திமுகவை உடனே வீட்டுக்கு அனுப்ப நினைக்கின்றனர். தமிழக முதல்வர் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் லாக்கப் மரணம் நடந்துள்ளது. 4 வருடம் செயல்படாமல் இருந்ததன் விளைவுதான் இது. புகார் கொடுக்க காவல் நிலையம் சென்று வர மக்களுக்கு பயத்தை உருவாக்கியுள்ளனர்.
ஏ.ஆர் ரகுமானின் மிகப்பெரிய ஸ்டூடியோவை பார்வையிட சென்றேன். அவரிடம் அரசியல் பேசவில்லை.
நடிகை மீனா பாஜ கட்சிக்கு வந்தால் அவரை வரவேற்போம். பாஜகவை அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித்ஷா ஆகியோர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது.
தேசிய ஜனநாயக கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றியை தரக்கூடிய கூட்டணி.
பாஜக அதிமுக கூட்டணியில் குழப்பம் வேண்டாம், அவசரப்பட வேண்டாம் பொறுமையாக இருங்கள். அதுகுறித்து அமித்ஷா எடப்பாடி பழனிசாமி பார்த்துகொல்வர்கள். இதே போல ஸ்டாலினிடம் கூட்டணி குறித்து கேள்வி கேட்க முடியுமா? திமுகவில் உள்ள கூட்டணியில் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாற்று கருத்துக்களை தெரிவிப்பது குறித்து கேளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.