மத்தியபிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த நடிகை திவிஷா, வக்கீல் சமர்த் சிங்குக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருமணம் நடந்தது. கணவர் வீட்டில் வசித்து வந்த திவிஷா, மே 12ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாகவும், மனஉளைச்சல் ஏற்படுத்தியதாகவும் திவிஷா குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதன் பேரில், சமர்த் சிங்கும், அவரது தாயாரும், முன்னாள் நீதிபதியுமான கிரிபாலாவும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தனிக் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
