Skip to content
Home » விவசாயத்துக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை….அமைச்சர் துரைமுருகன்

விவசாயத்துக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை….அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது வலுவான வாதங்களை வைப்போம். கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை கட்டும் திட்டம் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. நடப்பாண்டு விவசாயத்துக்கு தடையின்றி நீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!