தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் திமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு பலத்தையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள், விழாக்கள், கூட்டங்கள் என தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம், கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழா, திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு ஆகியவை அதன் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் 13 கழக மாவட்டங்கள் மற்றும் 39 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள்

பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் மாவட்டம் வாரியாக தனித்தனி நிறங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூட்ட மேலாண்மை சீராக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அமர்வதற்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநாட்டின் ஒழுங்கமைப்பு பணிகளை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தன்னார்வலர்களாக மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் அடிப்படை வசதிகளை

கருத்தில் கொண்டு, தேவையெனில் நாப்கின் வழங்கும் ஏற்பாடுகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள், 350 மொபைல் கழிவறைகள், மினி கிளினிக், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பங்கேற்பாளர்களுக்கு மூன்று வேளை உணவும், தடையற்ற குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
150 ஏக்கர் பரப்பளவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சுமார் 4,000 வாகனங்களை நிறுத்துவதற்கான தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பறையிசை, சிலம்பம், வானவேடிக்கை

போன்ற பாரம்பரிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரை

நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் விழா மேடைக்கு அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டுத் திடல் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்துப் பயணம், புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி போன்ற திமுக அரசின் மகளிர் நலத் திட்டங்கள் விளம்பர பதாகைகளாக இடம் பெற்றுள்ளன. திராவிட இயக்கத்தின் போராட்ட வரலாறும், எதிர்கால அரசியல் கடமைகளும் இந்த மாநாட்டின் மூலம் வெளிப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் 2 லட்சம் பெண்களுக்கும் தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் அடங்கிய பை வழங்கப்படுகிறது.

