Skip to content
Home » பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், குன்னம்,  சின்ன வெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தனலட்சுமி . இவருக்கு பிரசவ வலி வந்தபோது 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தனலட்சுமியை அரியலூர் தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது வழியிலே சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், மருத்துவச் சிகிச்சைக்காக தனலட்சுமி மற்றும் குழந்தையும்

அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாபு அவசரகால மருத்துவர் முட்புணர் ஆனந்தராஜ் இருவருக்கும் தனலட்சுமி குடும்பத்தினர் நன்றியினை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!