மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமமுக மீனவரணி மாவட்டச் செயலாளர் போஸ் என்பவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அமமுக நிர்வாகி போஸை கைது செய்த போலீசார் அவரது காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
