திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஜூன் 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. வாயு கசிவு சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் மேலாளர் டைட்டஸ் சிங் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள் உள்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
