காஞ்சிபுரத்தில் இன்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
நாம் நடத்திய மாநாட்டை தமிழ்நாடே வியந்து பார்த்தது. அனைத்து கட்சிகளும் வாயை பிளந்து பார்த்தார்கள். அதில் திமுக பயம் ஏற்பட்டது. எங்கும் பிரச்னையே வரலியே , காலையில் 4 மணி வரை அப்படியே இருந்தார்களே எப்படி ? என திமுகவுக்கு புரியல. அதனால் தான் இன்று பாமகவை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் திமுகவுக்கு வந்தது.
அந்த மாநாட்டில் வன்னிய சமூகத்துக்கு துரோகம் திமுக செய்தது என நான் குற்றச்சாட்டை வைத்தேன். பாமக மாநாட்டை பார்த்து முதல்வருக்கு பயம் வந்து விட்டது.
4 ஆண்டுகள் நம்ப வைத்து இட ஒதுக்கீடு தருகிறேன் என கூறினார். பாமகவில் உள்ள சூழ்ச்சியாளர்களை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார் திமுக. எல்லோருக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு கொடுங்க. பாமகவை பலவீனப்படுத்துவதே திமுகின் நோக்கம். வன்னியர்கள் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என பயம் வந்து விட்டது. ஸ்டாலினுக்கு.
கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அய்யோவவோ, நானோ பிரச்னைக்கு காரணம் அல்ல. திமுக தான் காரணம்.
நம்ம கட்சியிலும் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் அதை செய்கிறார்கள். திமுகவால் நேரடியாக நம்மை சந்திக்க முடியாது. திமுகவின் முயற்சி வெற்றி பெறாது அதை உடைத்து எறிவோம்.
என் சமுதாயத்துக்கும், என் கட்சிக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.