Skip to content
Home » அங்கன்வாடி ஊழியரின் அந்தரங்க வீடியோவை வௌியிடுவதாக மிரட்டிய கூலிதொழிலாளி கைது…

அங்கன்வாடி ஊழியரின் அந்தரங்க வீடியோவை வௌியிடுவதாக மிரட்டிய கூலிதொழிலாளி கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி இவரது கணவர் கார்த்திகேயன் இறந்து விட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகிறார். ராஜாமணி இளையபெருமாள் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் ராஜாமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது இதனை பயன்படுத்திக் கொண்ட பாரதிராஜா அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த ராஜாமணி பாரதிராஜாவுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார் இதனால் ஆத்திரம் அடைந்த பாரதிராஜா ராஜாமணி வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையால் திட்டி நாம் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும்,அந்தரங்க வீடியோவையும்  கிராமம் மற்றும் சமூக வலைதளத்தில் அனுப்பி விடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து ராஜாமணி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!