திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று அளித்த பேட்டி விவரம் வருமாறு: அண்ணாமலை டே்டியை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. அண்ணாமலையின் அறியாமையை பார்க்கும்போது, இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என தெரியவில்லை. திமுக மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது சொல்லி இருக்கிறாரா என்றால் இல்லை. ஊழல் பற்றி பேச பாஜக தலைவர்களுக்கு தகுதி இல்லை. அண்ணாமலைக்கு உண்மை பேசி பழக்கமில்லை.
அண்ணாமலை யார், யார் மீது குற்றம் சாட்டி உள்ளாரோ அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுபவர்கள். அவர்கள் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுப்பார்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து கணக்கை காட்ட வேண்டும் என்பது தேர்தல் விதி. மோசடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்புகள் எல்லாம் பிரதமர் மோடி, நிர்மலா சீத்தாராமன் ஆகியேரிடம் உள்ளது. இந்த பேட்டி மூலம், பிரதமரையும், நிர்மலா சீதாராமனையும் அண்ணாமலை குற்றம் சாட்டுகிறாரா?
திமுகவின் சொத்து என்று அவர் கூறியதற்கான ஆவணங்களை அவர் 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். திமுக பள்ளிகள் நடத்துவதாக கூறியதற்கு ஆவணங்களை, ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் இல்லாவிட்டால் வழக்கு தொடர்வோம்.
ரபேல் வாட்ச் வாங்கியதற்கான பில் என்று கூறி ஒரு துண்டு சீட்டை காட்டுகிறார். பில் என்பது வேறு துண்டு சீட்டு என்பது வேறு?
ஆருத்ரா நிர்வாகிகளிடம் அண்ணாமலை பல கோடி ரூபாய்களை நேரடியாக பெற்றிருக்கிறார் என்று புகார் எழுந்துள்ளது.தன் மீதான குற்றசாட்டை மறைக்க அண்ணாமலை ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். ஆருத்ரா வழக்கில் அண்ணாமலை நிச்சயம் சிறைக்கு செல்வார். அண்ணாமலை மீது வழக்கு தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம்.பேட்டி கொடுத்த அண்ணாமலை அது தொடர்பாக பத்திரிகையாளர்களை கேள்வி கேட்க அனுமதிக்காதது ஏன்-
இவ்வாறு அவர் கூறினார். பே்டியின்போது திமுக எம்.பிக்கள் வில்சன், இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.