கர்நாடகாவில் அதிக சிக்கன் துண்டுகளைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சீதாராமன் என்பவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்த அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் இக்கொலையைச் செய்துவிட்டு, சீதாராமன் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அருண் கொலை செய்தது உறுதியாகி உண்மை அம்பலமானது.
