அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61.44 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 65 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி – IV தேர்வுக்கான கையேடு மற்றும் பாடபுத்தகங்களையும்
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.