அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைக்கூடம் ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகள் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா திறந்து வைத்தார்.
அந்த வகையில் திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பழுவூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.48.35 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் இலந்தைக்கூடம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.48.35 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.96.70 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு கால்நடை மருந்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருமானூர் ஓன்றியக்குழுத்தலைவர் சுமதி அசோக சக்கரவர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.