Skip to content
Home » அரியலூரில் “கலைச் சங்கமம்” நிகழ்ச்சி… நாட்டுபுற கலைஞர்களுக்கு பரிசு…

அரியலூரில் “கலைச் சங்கமம்” நிகழ்ச்சி… நாட்டுபுற கலைஞர்களுக்கு பரிசு…

  • by Senthil

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக “கலைச் சங்கமம்” நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் “கலைச் சங்கமம்” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கலைச் சங்கமம் கலை விழாவாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைச் சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் பேருந்து

நிலையம், அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நடைபெற்ற “கலைச் சங்கமம்”;; நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டு, கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

இக்கலைச் சங்கம விழாவில் நாட்புறக் கலைஞர்கள் தமிழ்நாட்டின் பாராம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகளான நையாண்டி மேளம் – கரகாட்டம், பறையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள், அரிச்சந்திரா – இசை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.  இந்நிகழ்ச்சியில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், கலைச்சங்க குழுவினர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!