Skip to content
Home » கூலிதொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்… விசிகவினர் எஸ்பியிடம் புகார்..

கூலிதொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்… விசிகவினர் எஸ்பியிடம் புகார்..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ராங்கியம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (35)கூலி தொழிலாளியான இவர் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாலையோரத்தில் மது அருந்தி கொண்டிருந்த சிலர் ராஜேஷை இடையில் வழிமறித்து டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வரச் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். ராஜேஷ் அவர்களுக்கு பயந்து டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வந்து அவர்களிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக முயற்சித்தார். அப்போது மீண்டும் அவரை தடுத்து நிறுத்தி குடிபோதையில் அடையாளம் தெரிந்த நான்கு பேர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அவரை தாக்கியதில் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

மேலும் குடிபோதையில் இருந்தவர்கள் ராஜேஷ் உடலில் நெஞ்சுப் பகுதியில் சிகரெட்டால் சூடு வைத்தும் அவரதுகையில் செருப்பு காலால் மிதித்தும், இடது கையை உடைத்தும், வயிற்றில் உதைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன், ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இலக்கியதாசன் உள்ளிட்ட விசிக.வினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷை நலம் விசாரித்து டாக்டரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் ராஜேஷ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி சித்திரவதை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி ஜெயங்கொண்டம் டிஎஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.இது குறித்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!