Skip to content
Home » வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையேற்று, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக வாக்காளர் உறுதிமொழி எடுத்த பின் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக ஏவிஎம் கார்னர் வழியாக அரசு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் துணை வட்டாட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!