வாரம் 5 நாட்கள் மட்டுமே பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 11ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 5 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என வங்கி ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வார விடுமுறையும், 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் உள்ளதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
