Skip to content
Home » வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் அரவக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் மேல்தளத்தில் தூங்கச்சென்றுவிட்டனர். இந்நிலையில் மர்மநபர்கள் பின்பக்கமாக உள்ளே நுழைந்து முன்பக்க கதவை உடைத்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 12 பவுன் நகை, ரூ.5ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச்சென்ற னர். காலையில் எழுந்து கீழே வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடப்பதை கண்டும், பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளைபோனது கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை மேற்கொ ண்டனர். கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவம் வேட சந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!