மழைக் காலங்களில் வைக்கப்படும் பிளெக்ஸ் பேனர்களால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகளும் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, எந்தப் பகுதியில் யார் பேனர் வைத்திருந்தாலும் அவற்றை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என அமைச்சர் விஜய் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த 3 மாதங்களுக்கு எந்த இடத்திலும் பேனர்கள் வைக்காதவாறு கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
