வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாழ்வு நிலை இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 2ம் தேதி புயல் சின்னமாக உருவாகும் . இதன் காரணமாக வரும் 4ம் தேதி சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கூறப்படுகிறது.
இந்த புயல் தமிழகத்தின் வழியாக கடந்து செல்ல வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.