டெல்லியில் பிரதமர் மோடியுடன் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி சந்தித்து பேசினார். பீகார் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் ஆலோசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பீகாரில் தே.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். மோடியுடன் ஆலோசனை நடத்திய நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனும் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

