குஜராத்தின் விசாவதர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. இதில் குஜராத்தின் விசாவதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலம்பூர், மேற்கு சங்கத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு என மொத்தம் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் காளிகஞ்ச் தொகுதியில் 69.85 சதவீத வாக்குகளும், நிலம்பூர் தொகுதியில் 70.76 சதவீத வாக்குகளும், குஜராத்தின் விசாவதார் தொகுதியில் 54.61% மற்றும் காடியில் 54.49% வாக்குகளும், லூதியானா மேற்கில் 40.07சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. இந்த 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்தில் விசாவதர் சட்டமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் இதலியா கோபால் அபார வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கிரித் படேல் 17,581 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதலியா கோபால் வெற்றி பெற்றதை அடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.