Skip to content
Home » கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த  லோகேஷ் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. 2 குண்டுகள் வீசிய நிலையில் 5 பேர்கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.  இதில் லோகேஷ் அந்த இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியது.    அந்த கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!