Skip to content
Home » மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி  கடியாபட்டியில் காணும் பொங்கல் திருவிழாவையொட்டி இன்று  ஊர் பொதுமக்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டிகளை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   இதில் அரிமளம் ஒன்றிய திமுக செயலாளர் ராமலிங்கம் மற்றும் ஊர் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.  வெற்றிபெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  ஏராளமான மக்கள் திரண்டு போட்டியை கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!