Skip to content
Home » மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது பெற்றோர், நடிகர் பாலாவிடம் உதவி கேட்டிருந்தனர். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸூடன் கைகோர்த்த பாலா இது குறித்தான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளை இருவரை பள்ளிக்கு தினமும் அழைத்துச் செல்ல ஸ்கூட்டி வேண்டும் என அந்த குழந்தைகளின் பெற்றோர், நடிகர் பாலாவிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸூடன் சேர்ந்து ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்துள்ளார் பாலா. இந்த வீடியோவை தன்னுடைய சமூகவலைதளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஸ்கூட்டி வழங்கிய பாலா, ராகவா லாரன்ஸ்
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஸ்கூட்டி வழங்கிய பாலா, ராகவா லாரன்ஸ்

அந்த வீடியோவில் அவர், “இந்த அழகான குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள். அதனால், அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு அவரது பெற்றோர் சிரமப்படுகின்றனர். அதனால், எங்களிடம் ஸ்கூட்டி வாங்கித் தர சொல்லி கேட்டிருந்தனர். நானும் என்னுடைய ரோல் மாடல் லாரன்ஸ் மாஸ்டரும் சமமாகப் பணத்தைப் பகிர்ந்து இந்த அழகான குடும்பத்திற்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்துள்ளோம்” எனச் சொல்லியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விரைவில் தனக்குத் திருமணம் என்ற விஷயத்தை சொல்லி இருந்தார் பாலா. ஆனால், இவரது தாராள உதவி செய்யும் மனப்பான்மை எங்கு தனிப்பட்ட வாழ்க்கைக்கு பிரச்சினைக் கொண்டு வருமோ என பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்குத் தயக்கம் காட்டுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அது குறித்து பாலா இதுவரை எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!