காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டில்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடப்பதால் கர்நாடக பாஜ அரசு இந்த கூட்டத்தை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தும் வகையில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என தெரிகிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் இந்த கூட்டத்தின் விவாத பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.