Skip to content
Home » காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக அரசும், எதிர்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும். காவிரி பிரச்சினையில் ஆபத்து நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சரும், தமிழக அரசும் பிரச்சினைக்கு இடம் கொடுக்காமல் தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். அப்படி ஒரு அழைப்பு விடுக்கப்பட்டால், அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!