Skip to content
Home » மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..

மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு 310 கி.மீ தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில்  மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. இது நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!