திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (22627), வரும் ஜூன்.24-ம் தேதி ஒரு நாள் மட்டும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கமான வழித்தடமான சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களை தவிர்த்து, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, கொல்லம் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
