சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையினை வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ.
சாமிநாதன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா,சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜான் எபினேசர், துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த. மோகன், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர் மு.அருணா ஆகியோர் உள்ளனர்.