சென்னை கோயம்பேடு பகுதியில் 31 வயதுடைய தனியார் பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வருகிறது. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவர் இரவு நேரத்திலும் ஆட்டோ ஓட்ட சென்று விடுவார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஆசிரியை தனது மகள்களுடன் இருந்தார். புழுக்கமாக இருந்ததால் கதவை திறந்துவைத்து விட்டு தூங்கிவிட்டார். நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த ஒரு போதை ஆசாமி ஆசிரியையை பலாத்காரம் செய்துவிட்டார். அவர் கூச்சல்போட முயன்றார். அப்போது அந்த ஆசாமி கத்தியை எடுத்து குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டினார். பின்னர் போதை ஆசாமி தப்பி ஓடும்போது ஆசிரியை கூச்சல் போட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த நபரை பிடித்து அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் போதை ஆசாமியின் பெயர் ஜான் பால்ராஜ்(38), கோயம்பேடு என தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.