Skip to content
Home » கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Senthil

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வௌியேற்றுவது குறித்தும் ஆய்வு செய்தார். அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசினார்.  கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மக்களிடம் குறைகளை

கேட்டறிந்தார். சீரமைப்பு பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் பிரியா முதல்வரிடம் விளக்கம் அளித்தார். உடன் அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, எம்பி ராசா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!