மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூன்றாவது நாளான இன்று 5,6,19,20 ஆகிய நான்கு வார்டு பகுதி மக்களுக்கு திருவப்பூர் கனகம்மன் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களின் மனுக்கள் சரிவர அரசு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பயன் பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா அரசாணை
வழங்கினார் . இந்நிகழ்வின்போது நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாக்கத்அலி, நகரதுணைச்செயலாளர்ரெங்கராஜ்,நகர்மன்ற உறுப்பினர் கள்கனகம்மன்பாபு,பால்ராஜ்மற்றும்கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.