பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என சீனா தெரிவித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் எங்களின் அண்டை நாடுகள்.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இருதரப்பினரும் செயல்பட வேண்டும். நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்
நடத்தியதை அடுத்து பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. அனைத்து வகையான பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது