Skip to content

கரூர் தொட்டிய கருப்பண்ண சாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சோமூர் கிராமம், காளியப்ப கவுண்டனூர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண சுவாமி ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேக யாகசாலை அமைத்து முதல் காலையாக வேள்வி, இரண்டாம் காலையாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை காட்டிய பிறகு, மேல, தாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனித கலச குடத்தை

தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் பல்வேறு வேத மந்திரங்கள் கூறியபடி கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழாவை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தொட்டிய கருப்பண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித கலச தீர்த்தத்தால் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்ததால் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்ட பிறகு விபூதி பிரசாதம் வழங்கினர். சோமூர் காளியப்ப கவுண்டனூர் பகுதியில் நடைபெற்ற பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!