மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்.
அரசாணை 950, நாள் : 8.8.1990 ன் படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணி செய்திடும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி (செவ்வாய்) இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்க வட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன், திட்ட நிர்வாகிகள் பழனியாண்டி, இருதயராஜ், எஸ்.கே.செல்வராஜ், கண்ணன், கோட்ட செயலாளர்கள் ராதா, நாகராஜன், ரியாஜூதீன், ரவிச்சந்திரன், செல்வம், மணிகண்டன், ஜெசிந்தா ரோஸ்லின்மேரி, ஸ்டாலின் உள்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.
