ெசன்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த 3. 4ம் தேதிகளில் பெய்த கனமழையால் 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் கடந்த 16, 17ம் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டி 4 மாவட்டங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
சென்னை வெள்ள நிவாரணத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி முதல்வர் நிவாரணம் கேட்டு கடிதம் எழுதி உள்ளார். இப்போது நெல்லை உள்பட 4 மாவட்டங்களிலும் அதே அளவு வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது. எனவே நிவாரணப்பணிகளுக்கு நிதி கேட்டு பிரதமர் மோடியை சந்தித்து பேச தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். இதற்காக நாளை சந்திக்க நேரம் கேட்டு பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நேரம் ஒதுக்கப்பட்டால் நாளை பிரதமரை டில்லியில் சந்திப்பார் என தெரிகிறது.
டில்லியில் நாளை இந்தியா கூட்டணி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு செல்லும் முதல்வர் பிரதமர் மோடியையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.