Skip to content
Home » இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை….. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை….. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

நாகை துறைமுகத்தில் இருந்து தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் 3 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கடந்த 9-ந்தேதி இலங்கை ராணுவம் அத்துமீறி கைது செய்து  இலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளது.   நாகை  மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்   ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்றும், தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!