கரூரில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கரூர் – கோவை சாலையில் வையாபுரி நகர் அருகில் பறக்கும் படை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களை சோதனை செய்தபோது, லிங்கதுரை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் 99 ஆயிரம் ரூபாயும், அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் 95 ஆயிரத்து 750 ரூபாயும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்டதால் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
